நீங்காத நினைவுகள்..

எனக்கு இன்னும் நினைவிருக்கு
என்றும் என் நினைவில் இருக்கும்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை
எனக்காக நீ துன்பப்பட்டது

எனக்கு இன்னும் நினைவிருக்கு
முன்பு நீ நிறைய அழுதிருக்கிறாய்
எனக்கு இன்னும் நினைவிருக்கு
முன்பு நீ நிறைய அர்ப்பணித்திருக்கிறாய்

எனக்கு இன்னும் நினைவிருக்கு
முன்பு நீ ரொம்ப தைரியசாலி
என்னை மனிதநேய மனிதனாக வளர்த்தெடுத்தாய்

எனக்கு இன்னும் நினைவிருக்கு
முன்பு நீ கடுமையாக உழைத்தாய்
எனக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதற்கு

எனக்கு இன்னும் நினைவிருக்கு
முன்பு நீ எனக்கு அன்பை ஊட்டினாய்
பண்புள்ள மானிடனாய் வளர்வதற்கு

எனக்கு இன்னும் நினைவிருக்கு
அவ்வளவு சீக்கிரம் மறந்திட மாட்டேன்
உன் பற்றுக்கு ஈடு செய்ய முடியாது
முழுமையாக ஈடு செய்ய முடியாது
உன் தியாகத்தை

அம்மா......!!!!!!!!
எனக்கு இன்னும் நினைவிருக்கு
கோடி நன்றியை உரித்தாக்குகிறேன்
தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருப்பேன்
என் ஆயுட்காலம் முடியும் வரை

எனக்கு இன்னும் நினைவிருக்கு
கள்ளங்கபடமில்லா உன் அன்பு
தூய மனம் கொண்ட உன் அன்பு

Read Comments

அழியாச் செல்வம்!!

அம்மா என்ற சொல்லினிலே
அர்த்தங்கள் ஆயிரம் கண்டேனே..
அன்னையின் மடியில் சாய்கையிலே
அழியாச் செல்வம் கொண்டேனே..

அதரத்தில் உதிரும் மொழியினிலே
அறிவின் ஊற்றைக் கண்டேனே..
அரவணைக்கும் உந்தன் கைகளிளே
அன்பின் வெள்ளம் கொண்டேனே..

அழகு உள்ளம் கொண்டவளே
அகத்தின் மென்மையும் கண்டேனே..
அகிலம் போற்றும் தாயவளே
அனைத்தும் உன்னில் கொண்டேனே..

Read Comments

பொங்கட்டும் பொங்கல்

பொங்கட்டும் பொங்கல்
பெருகட்டும் மகிழ்ச்சி
மிஞ்சட்டும் நலங்கள்
விஞ்சட்டும் இன்பம்
தங்கட்டும் நன்மைகள்
மங்கட்டும் தீமைகள்
நிலவட்டும் நல்லது
நீங்கட்டும் தீயது
நிறையட்டும் நிம்மதி
நீளட்டும் வாழ்நாள்
பொங்கட்டும் பொங்கல்
பொங்கட்டும் மகிழ்வெங்கும்

Read Comments

கையில் வருவாயோ...!

நீல வண்ண வானமே..
நீண்டு எங்கோ செல்கின்றாய்!
நீரும் உந்தன் வண்ணமே..
நீயும் உடன் செல்கின்றாய்!

எட்டி எட்டித் தொட்டேனே..
எங்கே நீயும் இருக்கின்றாய்!
இரவு வேளை பார்த்தேனே..
இருளில் சூழ்ந்து கிடக்கின்றாய்!

மலையில் ஏறி வந்தேனே..
மேலும் உயரே போகின்றாய்!
மலைத்து நானும் நின்றேனே..
முடிவாய் என்ன சொல்வாயோ?!

Read Comments

அவள்போலே பெற்றதென்ன?!

தென்றலிலே அசைந்தாடி
தேமதுர ஓசைத்தந்து
மின்னொளிரும் உருவினிலே
மிஞ்சுகின்ற மென்மையிலே
வண்ணமலர்க் கோலமென்ன!

இத்தனை வகைகளாய்
எத்தனை நிறங்களாய்
எத்தனை உருவங்களாய்
அழகான இயற்கைத்தாய்
அவள்போலே பெற்றதென்ன!

நித்தமும் நினைவூட்டும்
நிலையான மகிழ்ச்சிதனை
எப்படித்தான் புகழ்வதுவோ
எழிமலர்கள் கொள்ளைதனை
இனிமையாய்க் கண்டாலென்ன?!

Read Comments

தமிழில் பேசுவோம்!

தமிழ்ப்பள்ளி செல்லாமல் - நீ
காண்வன்ட் ஸ்கூல் செல்கின்றாய்
அம்மா அப்பா இருக்கையிலே - நீ
மம்மி டாடி என்கின்றாய்

எளிதான ஒரு காரியத்தை - நீ
சின்னாங்காக முடிக்கின்றாய்
வானொலி இருக்கும் போதினிலே - நீ
ரேடி யோவைத் தானே கேட்கின்றாய்

கால் சட்டை அணியாமல் - நீ
சிலுவாரைத் தேடி அலைகின்றாய்
தமிழ்ச்சொல் சிரமம் என்றாயே - நீ
இங்லிஷ் ஈஸி நினைக்கின்றாய்

கணினி என்ற அருஞ்சொல்லிருக்கு - நீ
கம்ப்யூட்டரிலே மோகம் கொள்கின்றாய்
மொழியில் கலப்பு செய்யாதே - தமிழ்
மொழியில் பிறமொழி சேர்க்காதே!!

Read Comments

என் மகன் எனக்காக!!!!

அப்பா, இன்று ஒரு நாள் மட்டும்
என்னோடு நேரத்தைச் செலவிடுங்கள்
எனக்காக இந்நாள் மட்டும்
அர்ப்பணிப்பு செய்யுங்கள்!!

இன்று காலை எழுந்ததும்
உங்கள் கைபேசியை வைத்துவிட்டு
என்னைக் கொஞ்சம் பாருங்கள்
உங்களருகில் படுத்திருக்கும்
என்னைக் கொஞ்சம் கொஞ்சுங்கள்!!

அம்மா பசியாற செய்துவிட்டார்
வாருங்கள் சேர்ந்தே சாப்பிடலாம்
என்னை மட்டும் தனியாக என்றும்
சாப்பிடச் சொன்னால் எப்படியப்பா?

வாருங்கள் நீங்களும் அம்மாவும்
சேர்ந்தே வந்து அமருங்கள்
நானும் உங்களோடே இன்று
உட்கார்ந்து பசியாறப் போகிறேனே!!

கொஞ்ச நேரம் வாருங்கள் அப்பா
பூப்பந்து விளையாடலாம்
வெயில் என்று சொல்ல வேண்டாம்
வீட்டின் உள்ளே விளையாடலாம்!!

பூப்பந்து விளையாட்டு போதும் அப்பா
கூடைப்பந்து விளையாடலாம்
கூடை இல்லையென்றால் பரவாயில்லை
சுவரின் மேலே வீசி எறியலாம்!!

விளையாடியது போதும் அப்பா
கேலிப்படம் பார்க்கலாம் வாருங்கள்
இன்று மட்டும் என் பக்கத்தில்
வந்து அமர்ந்து பாருங்கள்!!

எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் பல
அவற்றை இன்று பார்ப்போமே
உங்கள் விருப்பப் படங்களை நீங்கள்
பிறகு கண்டு களியுங்கள்!!

மாலை நேரம் உறங்க வேண்டாம்
என்னோடு சேர்ந்து விளையாடுங்கள்
நான் வீடு கட்டப் போகிறேன்
எனக்குக் கொஞ்சம் உதவுங்கள்!!

நான் கட்டிய வீடு
பெரிய வீடு அழகான வீடு
என்றே கொஞ்சம் புகழுங்கள்
என் மனதைக் குளிர வையுங்கள்!!

என் அன்புள்ள தந்தையே
அதிக அக்கறை கொண்டவரே
உங்கள் பாசமும் அன்பும் நானறிவேன்
எனது ஏக்கமும் கொஞ்சம் நீங்கள் அறியுங்கள்!!

Read Comments

திருக்குறள்

குறளைப் படித்து வாழ்ந்தால் - உலகில்
குறைகள் ஏதும் நமக்கில்லை
அறிவை வளர்க்கும் குறளை - நாளும்
அறிந்து கொண்டால் துன்பமில்லை

அடிகள் எல்லாம் வெற்றிப் படிகள்
படிக்கப் படிக்க முத்து மணிகள்
அழியாச் செல்வம் தமிழ்மறையே - தமிழன்
மடியில் தவழும் முக்கனியே

புகழை மலரவைக்கும் விதை - தமிழர்
வாழ்வை ஒளிரவைக்கும் கவிதை
வள்ளுவர் வழியில் செல்வோம் - தமிழ்க்
கொள்கை தனிலே சிறப்போம்

Read Comments