| at 10:08 AM
தென்றலிலே அசைந்தாடி
தேமதுர ஓசைத்தந்து
மின்னொளிரும் உருவினிலே
மிஞ்சுகின்ற மென்மையிலே
வண்ணமலர்க் கோலமென்ன!
இத்தனை வகைகளாய்
எத்தனை நிறங்களாய்
எத்தனை உருவங்களாய்
அழகான இயற்கைத்தாய்
அவள்போலே பெற்றதென்ன!
நித்தமும் நினைவூட்டும்
நிலையான மகிழ்ச்சிதனை
எப்படித்தான் புகழ்வதுவோ
எழிமலர்கள் கொள்ளைதனை
இனிமையாய்க் கண்டாலென்ன?!
1 comments:
இயற்கையின் அழகு,
இனிமையின் அணைப்பு,
இலக்கியத்தின் அதிர்வு,
இதயத்தின் அசைவு, ...
:)
Post a Comment