திருக்குறள்

குறளைப் படித்து வாழ்ந்தால் - உலகில்
குறைகள் ஏதும் நமக்கில்லை
அறிவை வளர்க்கும் குறளை - நாளும்
அறிந்து கொண்டால் துன்பமில்லை

அடிகள் எல்லாம் வெற்றிப் படிகள்
படிக்கப் படிக்க முத்து மணிகள்
அழியாச் செல்வம் தமிழ்மறையே - தமிழன்
மடியில் தவழும் முக்கனியே

புகழை மலரவைக்கும் விதை - தமிழர்
வாழ்வை ஒளிரவைக்கும் கவிதை
வள்ளுவர் வழியில் செல்வோம் - தமிழ்க்
கொள்கை தனிலே சிறப்போம்

Read Comments

1 comments:

இனியவன் said...

திருக்குறளை இவ்வளவு அழகாகப் பாடியுள்ளீர்கள்.. வாழ்த்துகள்..