மறைந்தாள்
வானவில் போல் ஏழு வண்ணமாய் - என்
வாழ்க்கை என்னும் வாசலில் தோன்றி நிற்கிறாய்..
கொள்ளை அழகு மொத்தமும் உன்னில் காண்கிறேன் - நீ
கொல்லைக் கொண்ட என் மனதும் உன்னில் காண்கிறேன்..
அள்ள அள்ளக் குறையாத அன்பைக் காண்கிறேன் - நீ
ஆசையாய் கொடுத்த முத்தம் எண்ணிப் பார்க்கிறேன்..
எண்ணிலடங்கா இன்ப அலைகள் உன்னில் காண்கிறேன் - என்
உறக்கம் தொலைத்த நாட்கள் இங்கே எண்ணிப் பார்க்கிறேன்..
கண்ணைப் பறிக்கும் உன்னை நானோ பறிக்க நினைக்கிறேன் - நீ
பாதி வழியில் என்னை விட்டு மறைந்து போனதேன்?!?!

0 comments:
Post a Comment